title


கனவாய்ப் பழங்கதையாய்

காலங்காலமாய்
புனைந்துகொண்டேயிருந்த
கதைசொல்லி பாட்டியின்
வாய் போலவே
என் காதலும்

அனுபவிக்க ஆளில்லாவிட்டாலும்
ஊற்றெடுக்கிறது
அதன் போக்கில்

***

ஆகச் சிறந்த
ஆழ்முத்தத்தில் கூட
எச்சில் தவிர்க்கும்
நாசூக்குக்காரி நீ !

அதனால்தான் கடந்தாய்
கண்ணீர்த்துளிகளை
வெறும் உப்புநீர் என…

No comments: