title


ஒரு கண்ணாடியின் கதை

யார் வந்து முன்நின்றாலும்
பாவக்கணக்குப்படி பிம்பம் காட்டும்
அது மாயக்கண்ணாடி…

ஒரு அரசியல்வாதி
அடுத்து ஒரு கல்வித்தந்தை
ஒரு தொழிலதிபர்
தொடர்ந்து ஒரு மருத்துவர்

மாறி மாறி நின்று பார்க்க

சுனாமிப் பேரலைகள்
ஓநாய்க்கூட்டம்
காட்டேரிகள்
மட்டுமின்றி எரிமலைகள்

என காட்டிக் காட்டி
களைத்துப்போனது கண்ணாடியும்…

கடைசியாக
தன்பலன் பார்க்க வந்தார்
கடவுளும்…

வெடித்துச் சிதறியது
கண்ணாடி!

No comments: