துடித்துச் சிதறும்
ஒவ்வொரு துளிக் கண்ணீரும்
வெடித்துவிடத் துடிக்கும்
மௌன மொழிகளும்
உண்ண மறந்து
உணர்விழந்த வலிகளும்
உன் ஒருத்தியைத் தவிர
உலகமே மறந்து போய்
எங்கோ நிலைகுத்திப்போன
பார்வையுமாய்
மொழியறியா தேசத்தில்
சிக்குண்ட குருடன் போல
....
இன்னும் எப்படியெல்லாமோ
இனிமையாய்த்தான் இம்சிக்கிறதடி
காதல் !
2 comments:
superb, nice poem
Very Superb poem... Manam urugi eludhirukeenga pola :)
Post a Comment