title


பிரிவு - Dedicated to Ram

காலப்பெருவெளி தன்
கணக்கை கூட்டிக்கொண்டேயிருக்க
ஞாலப்பெரும்பரப்பில்
நாமெல்லாம் சிதறலானோம் !

பனிக்குடத்தே அன்னை வசம்
அவள் வாசம் நம் சுவாசம்
பத்தாம் மாத பிறப்பில்
பிறந்தது " பிரிவு " !

கடற்கரை மணலை
கடத்திச் செல்லும் காலடி போல்
நம்மையும் எடுத்துக்கொண்டது
காலம் !

ஆறுகள் கடல் கலக்கும்
நியாயம் தான் !
வரும் வழியில் ஆவியாகும்
துளி வலி யாரரிவார் ?
அஞ்சியதுண்டு ...
அத்துளி போல் நீயோ ? நானோ?

காலத்தின் மூடியுள்ள கை விரியும்போது
பெரும்பாலும் ஆச்சர்யம் காத்திருக்கும்
எதிர்பாரா ஏதேனும் நடக்குமென
எதிர்பார்த்தே காத்திருப்போம்
காலம் ஒரு வித்தைக்காரன் !

1 comment:

Unknown said...

Gud One...

"piriyadha piriyam piriyum bodhu puriyum"