title


பருத்தி வீரன் - ஒரு பார்வை

இயக்குனர் அமீர்ன் முந்தைய படங்களினால் நான் கொண்டிருந்த அமீர் மீதான் நல்லதோர் எண்ணம் ஒரு படி உயர்ந்தது "பருத்தி வீரன்" பார்த்த பின்.
ரகளையான கிராமத்து திருவிழா தொடரும் பழி வாங்கும் படலம் என அமர்க்களமாய் துவங்குகிறது படம்.

சாதியை காரணம் காட்டி ஒதுக்கப்பட்டு சண்டியராய் திரியும் வீரன் மீது முறைப்பெண் முத்தழகு கொள்ளும் காதலும் அதைத் தொடர்ந்து வரும் சம்பவங்களுமாய் நகர்ந்து திடுக் நிகழ்வுடன் முடிகின்றது படம்.

முத்தழகாக வரும் ப்ரியாமணி பக்கத்து வீட்டு கிராமத்து பெண் போல தேர்ந்த வசன உச்சரிப்பும் எதார்த்த நடிப்புமாக அசத்தியுள்ளார். அதிலும் வீட்டில் காதலுக்காக அவர் நடத்தும் திமிர் கலந்த போராட்டம் அருமை.
சித்தப்புவாக சரவணன். மனிதர் பட்டையை கிளப்பிவிட்டார்.இத்தனை திறமையான நடிகரா இவர் என ஆச்சர்யம் தருகிறார்.அற்புதம்.

முதல் மேட்சில் சென்சுரி , முதல் பந்தில் சிக்சர் இன்னும் எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம் கார்த்தியை.குடித்துவிட்டு படம் முழுக்க இவர் அடிக்கும் லூட்டியில் அசல் கிராமத்து சண்டியராகவே தெரிகிறார். மிக நல்ல துவக்கம் .

ஒளிப்பதிவும்,இசையும் பலம் கூட்டுகின்றன.யுவனின் இசையில் எல்லா பாடல்களும் கிராமத்து பாணியில் ஜொலிக்கின்றன.கிராமத்து குத்துப்பாடல்களிலும்,இளையராஜா பாடும் "அறியாத வயசு" பாடலிலும் நிறையவே பாராட்டலாம்.

சரியான பாத்திர தேர்வு, நல்ல கிராமத்து பின்னணி,தொய்வில்லாத திரைக்கதை என வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் இயக்குனர் அமீர்.

திணிக்கப்பட்ட சோகமோ,சறுக்கலோ .....இறுதிக்காட்சிகளைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. மொத்தத்தில் "பருத்தி வீரன் " தமிழ் சினிமாவின் முக்கிய பதிவுகளுல் ஒன்று.இயக்குனர் அமீர் மீண்டும் ஒரு முறை வென்று விட்டார் .

3 comments:

Unknown said...

hey really great......
i couldnt find any words to appreciate u ..........
superb!!!!!!!!!

Anonymous said...

Nice Wordings and flow

Rappusam said...

Hi kalees,
Really superb, Is this your first crictism about cinema? I can't belive! superb