title


கொடை



அரிசி பருப்பு
சாமான்கள் விலை அறியாதபோது
அவனை எல்லோரும்
பொறுப்பில்லாதவன் என்றனர்
*
நல்லதாய் ஒரு துணி
வாங்கத் தெரியாத போது
அவனை ஒன்றும்
அறியாதவன் என்றனர்
*
வீடு மனை வில்லங்கங்கள்
புரியாத போது
அவனை எதுவும்
விளங்காதவன் என்றனர்
*
மனிதத்தின் மகத்துவத்தை
பேசும் போதெல்லாம்
அவனை நடைமுறை
தெரியாதவன் என்றனர்
*
இயற்கையின் மோகனத்தில்
லயித்திருந்த போது
அவனை எதற்கும்
உதவாதவன் என்றனர்
*
எல்லோரிடமும் ஜாதி
மறந்து பழகிய போது
அவனை கடவுளின்
எதிரி என்றனர்
*
கடையனின் துயரை
தன் துயராக்கி அழும்போது
அவனை பைத்தியம்
என்றே பரிகாசம் செய்தனர்
*
கடைசியாக மரித்துப்போன
பின்புதான் அவனை
“மகாகவி” என்றனர் !

(எல்லா நாளும் நினைக்கப்பட வேண்டிய பாரதிக்கு)

No comments: