title


வழி

சதையும் எலும்புமாய்
உடல் கொண்டு
அடைந்திருந்தது போதும் !

மாறிட வேண்டும்
சூரிய ஒளியாய்
காற்றாய்
குறைந்தபட்சம் நீராய்

பூட்டிக் கொள்ளுங்கள்
கதவுகளை...

சன்னல்களைக் கூட
சாத்திவிடுங்கள்...

சாவித்துவாரம் போதுமெனக்கு
நான் சென்று வர

No comments: