எல்லோரும் சொல்கிறார்கள்...
என் நடை
தகப்பனைப் போன்றதாம்..
கோபத்தில்
பாட்டன் முகமாம்..
உறங்கும் போது
பாட்டியின் சாயல்..
தூரத்து மாமன் போன்ற
அசிங்க அழுகையாம்..
அழகுப் புன்னகை
அன்னையின் அச்சாம்..
இப்படி என்
எல்லாவற்றிலும்
தெரிவது யாராவதானால்
நான் யார்? யார் நான்?
நானே தானா?
பல நான்களின் தொகுப்பா?
No comments:
Post a Comment