எனக்கு அப்போது ஏறத்தாழ பத்து வயதிருக்கும். என் நண்பனொருவன் வீட்டுக்கு விளையாடச் சென்றிருந்தேன். அவன் வீட்டில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. இப்போது சர்வாதிகாரம் புரியும் “வாஸ்து சாஸ்த்திரம்” அப்போது என்ன நிலையிலிருந்ததோ தெரியவில்லை. அவன் வீட்டில் நடந்துகொண்டிருந்த வேலையின் பிண்ணனி இதுதான் “தற்போது கழிவறையும் செப்டிக் டேங்க்கும் உள்ள இடத்தில் ஒரு புதிய அறை அமைப்பது. கழிவறையையும் செப்டிக் டேங்க்கையும் பக்கவாட்டிலுள்ள காலி இடத்தில் புதிதாக கட்டிக்கொள்வது”.
எங்கள் ஊரில் அந்தக் காலகட்டத்தில் கட்டிட வேலைகளில் கலக்கிக்கொண்டிருந்தவர் “யேசு மேஸ்த்திரி”. அது புதிதாக கட்டுவதானாலும், பழைய கட்டிடங்களில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்வதானாலும் அனைவரின் முதல் தேர்வு அவராகத்தான் இருந்தார். அவருக்கு முன்னும் சரி பின்னும் சரி அவரளவுக்கு தனிக்காட்டு ராஜாவாக ஜொலித்த மேஸ்த்திரி எவருமில்லை. ஒரே சமயத்தில் எங்கள் ஊரில் கட்டப்பட்டுவந்த ஐந்தாறு கட்டிடங்களுக்கு அவரே மேஸ்த்திரியாக பணியாற்றிய பெருமையும் அவர்க்குண்டு. குடிப்பழக்கம், வேலையில் கொஞ்சம் சுணக்கம் என்றாலும் பொதுவில் நல்ல திறமைசாலி. அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து கிறித்தவராக மாறியிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment