title


உறவு

வரம் வருமென்றெண்ணி
இறுமாந்திருக்கையில்
சபித்துப் பறக்கின்றன
தேவதைகள்......

சாபத்திற்கஞ்சி
விலகி நடக்கையில்
வரம் தந்தணைக்கின்றன
சாத்தான்கள்.....

தேவதைகளால் சபிக்கப்பட்டதால்
நானேதான் சாத்தானோ ?

ஆசிர்வதித்து அனுசரிக்கும்
சாத்தான்கள்தான் தேவதைகளோ ?

அனுதினமும்
அடையநேரிடும்
குழப்பத்தின் அவஸ்த்தை
சொல்லிமாளாதது....

நெருங்கிச் சென்றால்
தள்ளிவைத்து...
தள்ளி நின்றால்
அள்ளிச்செல்லும்
கணிக்கவியலா மாற்றங்கள்
எல்லாக் கணங்களிலும்
நிரம்பி வழிகின்றன...

மனம் வெறுத்து
சூனியமான அந்த நொடியில்
அறிவித்தது காலம்....

சாத்தானென்பதும் கடவுளென்பதும்
கண்ணாடியின் பிம்பங்கள்....

முன் நிற்பது
எதுவோ அதையே
உருவாய் மாற்றும்
தருணங்கள்.......

No comments: