title


வானம் வசப்படும்

நான் சென்னை வந்து ஏறத்தாழ 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்னை வந்த நாள் முதற்கொண்டே பாண்டிச்சேரி செல்ல வேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு. இன்னும் சொல்லப் போனால் பாண்டிச்சேரி செல்லவேண்டும் என்ற எண்ணத்தின் மூலக்காரணம் அம்மாநிலத்தின் மீது எனக்குள்ள வியப்பே.

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி (PEC), ”உலகத்தரத்தில்திருட்டு டி.வி.டிக்கள், என் தாய் மொழி பேசும் இன்னுமோர் மாநிலம் என பல காரணங்கள் என் வியப்புக்கு அடித்தளமாய் உள்ளன. இவற்றுடன் தமிழ்நாட்டை விட விலைவாசி மிக மிகக் குறைவு என சிலாகிக்கும்குடிமகன்களின் பாண்டிச்சேரி புகழ் சொல்லிமாளாது [ நம்புங்கள் நண்பர்களே.... எனக்கும்டாஸ்மாக்க்கும் உள்ள ஒரே சம்பந்தம் நான் ராவாகசெவன் அப் / பெப்ஸிகுடிப்பதற்கு சைடு டிஸ் கேட்பேன் என்பது என்பது மட்டுமே].

நிற்க, இவ்வாறாக பாண்டிச்சேரி செல்லவேண்டும் என்ற என்னுடைய ஆசைக்கு திரு. பிரபஞ்சன் அவர்கள் எழுதியவானம் வசப்படும்நாவல் இன்னுமொரு பெரிய தூண்டுகோளாய் அமைந்தது.

அடிப்படையில் இந்த நாவல் ஒரு சரித்திரப்பதிவு. ஆனால் வரலாற்றைப் பதிவு செய்த விதத்தில் இந்நாவலே சரித்திரமாகிவிட்டது. பிரஞ்சுதேசத்தின் காலனிப் பகுதிகளில் ஒன்றான பாண்டிச்சேரியின் குவர்னர் (கவர்னர் ?) துய்ப்ளெக்ஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல், அக்காலத்திய பாண்டிச்சேரி மக்கள் வாழ்வையும் பதிவு செய்துள்ளது.

அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு தகுந்தவாறுஜால்ராபோட்டால் மட்டுமே பிழைக்கமுடியும் என்ற நிலையிலும் நல்லனவற்றை கொஞ்சம் திணிக்க முற்படும் ரங்கப்பர், கணவனை காட்டிலும் ஆட்சியை காட்டிலும் ஏன் மக்களைக் காட்டிலும் மதமே முக்கியம் எனக் கருதும் மதாம் ழான், மதத்தலைவர்கள், அரசுப்பதவி கிடைக்க என்ன வேண்டுமானாலும் தர, செய்யத் தயாராக இருக்கும் மக்கள், வெளிப்படையான லஞ்சம் மூலமாக காரியங்கள் நடக்கும் அவலம், தீண்டாமையைக் கண்டு மனம் வெறுத்துப்போகும் பாதிரியார்கள், மென்மேலும் தவறு செய்யும் மனைவியை தட்டிக் கேட்காத குவர்னர் துரை இப்படி பலதரப்பட்ட பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் வாயிலாக மிகச் சிறப்பான முறையில் இந்நாவலை எழுதியுள்ளார் திரு. பிரபஞ்சன் அவர்கள்.

பொதுவில் வரலாற்று நாவல்கள், அக்காலத்திய மக்களின் வாழ்க்கை முறை, மொழி, பழக்கவழக்கங்கள், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட பதிவுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. இந்நாவல் அவற்றுடன் அரசியல் ரீதியான பதிவுகளையும் கொண்டுள்ளது. அரசியல் களத்தில் எதிரி காக்கப் படலாம், நண்பன் அழிக்கப்படலாம். நண்பனோ எதிரியோ அழித்தழில் / காத்தலில் தனக்கு நேரும் ஆதாயங்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும் இன்ன பிற அறங்கள் யாவும் அடிபட்டுப்போகும் என்பது பல சம்பவங்கள் வாயிலாக கூறப்பட்டுள்ளது.

திரு. பிரபஞ்சன் அவர்களால் மிகத்தரமான முறையில் எழுதப்பட்டிருக்கும் நல்லதொரு புத்தகம் “வானம் வசப்படும்”

நூல் : வானம் வசப்படும் (சரித்திர நாவல்)
எழுத்தாளர் : பிரபஞ்சன் அவர்கள்
பதிப்பகம் : கவிதா
விலை : 200 ரூபாய்

No comments: