title


மோட்சம்


இரவின் கொடுந்துயர்கூட்டும்

தனிமை அறுத்தெறிகிறது

காலத்துடனான பிணைப்பை…



இன்றிலிருந்து நேற்றுக்கும்

பின்னர் அதற்கு முன்பும்

ஊஞ்சலாட்டம் துவங்குகிறது

எண்ணம்



ரணப்பட்ட என் மனது

தனிமையில்

குத்திக்கிழித்த வாளும்

வாதை குறைக்கும் மருந்தும்

உன்னிடம்



என்னதான் சூடுபட்டிருந்தாலும்

அடுப்பன்றி வேறு அபயமில்லை

உன்னை நாடாமலிருக்க

மனம் ஒன்றும் பூனையல்ல

குரங்கு.

No comments: