title


கண்ணாடி


என் கண்களை 
மறைத்தபடி
பச்சைக் கண்ணாடி…

உன்னிடமிருப்பதோ
சிவப்புக் கண்ணாடி…

காணும் பொருள்யாவும்
பச்சையென்று 
நான் மெய்யுரைக்க…


பச்சையல்ல சிவப்பென்று
நீயும் மெய்யுரைக்க…

பொய்களிரண்டும் சண்டையிட்டன…

சண்டையிடும் பொய்களிடையே
காண்பார் யாருமின்றி மெளனமாய்
இருந்தது உண்மை… வெண்மை !

No comments: