title


சாதிகள் இல்லையடி



நாம் கற்றுத்தேரும் மதிப்பெண்களை அடிப்படியாகக் கொண்ட கல்வியால் நல்ல Xerox machineகளை அல்லது நடமாடும் Storage deviceகளை உருவாக்க முடியுமேயன்றி, ஒருபோதும் அறிவுசார் சமூகத்தை உண்டாக்கவே முடியாது என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

.

கல்லூரிக்காலங்களில் விடுதியில் கொஞ்சம் நெருங்கிப்பழகிய நண்பர்களுக்கிடையே பொதுப்பிரச்சனையை முன்னிறுத்தி வாக்குவாதங்கள் ஏற்படும். அந்த தனிப்பட்ட உரையாடல்களின் உணர்ச்சிமேலிடும் தருணங்களில், சிலர் வெளிப்படுத்தும் வார்த்தைகளில் பிற ஜாதி / மதத்தினர் மீதான வன்மம் வெளிப்பட்டிருக்கிறது. அத்தருணங்களில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் கல்லூரி மறைந்து, அணிந்திருக்கும் பகட்டான ஆடைகள் மறைந்து, அவர்களின் சுயம் தெரியவந்திருக்கிறது. மெத்தப்படித்திருந்தாலும், நுனி நாக்கு ஆங்கிலம் வசப்பட்டாலும், ஐந்திலக்கத்தில் சம்பளம் வாங்கினாலும் கிட்டத்தட்ட அதே மனநிலையை, இப்போது IT துறையிலும் சில நண்பர்களிடம் பார்க்கிறேன்.
.
“படிக்காம உங்கப்பன் ஆத்தாதான் வீணாப்போய்ட்டாங்க நீயாவது படிச்சு முன்னேறு”


“நல்ல படிங்கடா அப்பத்தான் வாழ்க்கைல முன்னேறலாம்”


போன்ற அறிவுரைகளை நம் பள்ளிக்காலங்களிலும் கல்லூரிக்காலங்களிலும் நிச்சயமாய் கடந்து வந்திருப்போம். அந்த சொற்றொடர்களில் உள்ள முன்னேற்றம் எனும் வார்த்தை வெறுமனே சம்பளத்தையோ அல்லது வயிறு சார்ந்த வாழ்க்கையையோ மட்டும் குறிப்பிடுபவை அல்ல. அவை வாழ்க்கை முறையையும் அறிதலையும் சேர்த்ததுதான்.

.

மனிதர்களை அவர்கள் கருத்தை, உணர்வை சமமாய் பார்க்கும் எளிய உண்மையை கற்றுக்கொடுக்கும் அறிவு, ஆரம்ப பாட சாலைகளில் இருந்து பெரும்புகழ் கொண்ட IIT வரை இல்லையென்பது ஆகப்பெரிய சோகம்….


ஜாதி / மதம் / இனம் மறப்போம்; மனிதம் நினைப்போம்..


நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்…- பாரதி.

லீவு மாமே...



பொதுவா நமக்கு அர நாளு லீவு வுட்டா, அதுக்கு ஆயிரம் வேல லைன் கட்டி நிக்கும். இது தீவாளி, பொங்கலுக்கும் பொருந்தும், சாதாரண சனி, ஞாயிறுக்கும் பொருந்தும். சமயத்துல திங்கள் to வெள்ளி ஆபிசுல செய்யுற வேலைய விட விடுமுறை நாட்களின் வேலை அதிகமாயிடும்.

.

ஆனா, இந்த Onsite லீவு இருக்கே, என்னதான் அவிங்க லீவுன்னாலும் கொண்டாட்டம் நம்மளுக்கும் சேத்தித்தான். பொதுவா மாலை 6-7 மணியளவில் இருக்கும் onsite calls ம், இருக்கோ இல்லையோ அனுப்பவேண்டிய update mailsம் தேவையில்லைங்கறதே நெம்மப் பெரிய நிம்மதிங்க. எப்பயும் போல அரக்கப்பரக்க ஆபீசுக்கு கிளம்புறமாதிரி ஊட்ல சீன் போட்டுட்டு (மனசுக்குள்ள ஒரு லல்லல்லா பாட்டு ஓடிட்டு இருக்கும்கறது வேற விசயம்) ஆபீசுக்கு வந்துட்டா போதும். நம்மள மாதிரியே அம்புட்டு பயலுகளும் ஒரு தினுசா திரியறத பாக்குறதே ஒரு கொடுப்பினை. எத்தனை மணிக்கு கடய தொறக்கறோம்கறதும், ஷட்டர் எத்தனை மணிக்கு க்ளோஸ் ஆகுதுங்கறதும் தனி கணக்குதான்.
.
இன்னிக்கு அப்படியொரு நன்னாள்ங்கறதால 7 மணிக்கே ஆபீச விட்டு கெளம்பியாச்சு (எங்கணக்குக்கு இது அரை நாள்தான் பாத்துக்கங்க). கீரணத்தம் கிராமம் வழி கோவில்பாளையம் அடைந்து, அங்கிருந்து கருவலூருக்கு கிராமங்கள் வழி செல்லும் மனம் கவர்ந்த பாதையில், மெல்லிய இசையுடன் ஒரு அழகான பைக் டிரைவ். கூடடையும்போது மணி 8. குழந்தைகளுடன் ஒரு சின்ன விளையாட்டு கூடவே இரவுணவு. 9 மணியளவில் திரைப்படத்துக்கு செல்லலாம் என திடீரென முடிவெடுத்து, அப்பா, அம்மா, அருணா, கார்த்திக், கிருத்திகா என குடும்பமே சென்றது “தொண்டன்” படத்துக்கு.
.
படம் முடிந்து வரும்போது அம்மாவும் கிருத்திகாவும் சொன்ன review தான் Top. எழுத்துப்போடும் போதே இருவரும் தூங்கி விட்டார்கள். அவ்வப்போது முழிப்புவந்து படம் பார்த்த அம்மா சொன்னது “சரியான சண்டைப்படம்”; எதற்கும் அசையாமல் கருமமே கண்ணாய் இறுதிவரை தூங்கிய கிருத்திகாவின் கருத்து “சூப்பர் படம்”.
படம் கொஞ்சம் சுமார்தான்; ஆனால் இன்றைய நாள் வெகு சூப்பர் 
.
பேசாம நம்ம லீவ பூராம் பத்திவுட்டுட்டு, அதுக்கும் சேத்து ஆன்சைட் லீவா வச்சுக்கலாம் :)