காலம்
மீண்டும் மீண்டும்
மாறிக் கொண்டிருக்கிறது
காலம்
பருவ காலம்
கோடை காலம்
இலையுதிர் காலம்
குளிர் காலம்
.
.
.
.
ஏதோ ஒரு நம்பிக்கையுடன்
காத்திருக்கிறோம்
விடிவு காலமும் வருமென...
வழி
சதையும் எலும்புமாய்
உடல் கொண்டு
அடைந்திருந்தது போதும் !
மாறிட வேண்டும்
சூரிய ஒளியாய்
காற்றாய்
குறைந்தபட்சம் நீராய்
பூட்டிக் கொள்ளுங்கள்
கதவுகளை...
சன்னல்களைக் கூட
சாத்திவிடுங்கள்...
சாவித்துவாரம் போதுமெனக்கு
நான் சென்று வர
மீட்டாத வீணை
அபஸ்வரமாய்
மீட்டப்படுவதை விட
மூலையிலேயே
இருக்கட்டும் வீணை
அபஸ்வரத்தைக் காட்டிலும்
அமைதியே மேலானது !
‹
›
Home
View web version