இருப்பு
எல்லா மரணவீட்டிலிருந்து
நான் வெளியேறிவரும்போதும்
என் கைப்பிடித்தே உடன்வருகின்றன
மரணம் குறித்த வருத்தங்களும்
வாழ்வு குறித்த நிச்சயமின்மையும்
இருத்தலினாலான ஆசுவாசங்களும்...
அன்று மட்டும்
கொஞ்சம் அதிகமாகக்
கொஞ்சுகிறேன் குழந்தைகளை !
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment