அன்பு

" உன் நெனப்பா இருக்குப்பா "

ஒற்றை வாக்கியத்தில் வயதறுத்து

உயிரறுத்து அழவைப்பாள் அம்மா !

"கடல் மண், வாடிய பூ, அவள் கைபட்ட காகிதம்"

என குப்பைகளாலே அறையை

தாஜ்மஹால் ஆக்குவாள் காதலி !

கற்றுத் தரும் குருவுமாகி

கற்றுக் கொள்ளும் சேயுமாகி

களிப்புத் தருவாள் மகள் !

ஒட்டு மொத்த நீசத்தனம்

புரிந்த பின்னரும் அன்னையாகி

தலைதடவுவாள் தோழி !

தாய்மை என்றும்

தோழமை என்றும்

காதல் என்றும்

நகல் எடுத்தாலும்

என்றும் எதிலும் அழியாத

அசல் " அன்பு " !

1 comment:

  1. எதிலும் அழியாத
    அசல் " அன்பு " !

    athu engea kidaikkuthu solungkalen

    i am also in dire need.

    ReplyDelete