அதே மழை நாள்

சுழன்று கொண்டேயிருக்கின்றது
எப்போதும் போல பூமி...

சாலைகளில் மெதுவாய்
எறும்பைப் போல
ஊர்கிறது வெயில்

துவங்கி விட்டது
மற்றுமொரு நாள்..

உடல் உணர்கிறது
யாவையும்....

மனம் நங்கூரமடித்து
நிற்கிறது...

நீ விட்டுப் போன
அதே மழை நாளில்...

1 comment:

  1. in failure only,the feelings are so live.

    ReplyDelete